Saturday, December 23, 2006

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

செந்தழல் ரவி அவர்களின் பதிவை இங்கே பதிப்பிக்கிறேன்...

சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் - கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்...இதயம் கனத்துப்போனது...இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது...!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு...

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு...தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...

ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே...

வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்...அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்.....

இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்...அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN - a/c @ SBI - NEHRUJI NAGAR.)

அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
njaanam@gmail.com
0451-2436844


வங்கி கணக்கு

N.JAYACHANDRAN
SBI Account No: 10261284116
NEHRUJI NAGAR
DINDUKKAL


அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com

ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்...

ICICI A/C : 625301514495
Branch : Kumar Park Branch
Name : Ravindran A

8 Comments:

said...

ரசிகவ்.. நீருமா?

பின்னூட்ட கயமை-1.

3:25 PM  
said...

//யெஸ்.பாலபாரதி said...
ரசிகவ்.. நீருமா?

பின்னூட்ட கயமை-1. //

நன்றி கயமைக்கு...

இந்த விதைகள் வலைப்பதிவே அதற்காகத்தான் பாலா..

4:13 PM  
said...

பின்னூட்ட காவாளித்தனம்-2

4:43 PM  
said...

தம்பி,
செஞ்சிடுவோம்.

6:35 PM  
said...

அட்டெண்டன்ஸ் :)

10:44 PM  
said...

//ஆழியூரான் said...
பின்னூட்ட காவாளித்தனம்-2 //


//சேதுக்கரசி said...
அட்டெண்டன்ஸ் :) //



உங்களையெல்லாம் அந்நியன் ஸ்டைல்ல பழிவாங்கினாத்தான் சரிவருவீங்க :)

1:27 PM  
said...

Friends of Children (FoC) is a group of individuals who have an urge to contribute their share to society.

The main objective of FoC is to sponsor deserving students for higher education (above Class 10), guide them and assist them to earn their own living.

We try to ensure that not only the best student is supported, but also a committed and talented student is encouraged as well.


At present, FoC is sponsoring 85 students in Pune for academic year 2006-07. (60 Students in Pune and 25 students from the villages near Narayangaon). The approximate expense for these students is expected to be around 5.0 Lakh.

FoC Students Picture

FoC has raised & spent over Rs 10.0 lakhs for Educational purposes of over 200 Students in last 3 years.

FoC raises funds on a regular basis. We encourage our friends to form a group of 5 to 10 persons and donate as little as Rs 100 per month (100 x 12 x 5= Rs 6000 per year) which is sufficient for the yearly educational expenses for one student. FoC is registered as a Society under Maharashtra Charity Commission (Mh/115/2004/Pune).

This mail is only for information, If possible anyone can do the same in their own city.
Thanks
FoC Team
www.focpune.blogspot.com

5:15 PM  
said...

// said...
Friends of Children (FoC) is a group of individuals who have an urge to contribute their share to society.//

தகவலுக்கு நன்றி

10:11 AM  

Post a Comment

<< Home