Monday, May 01, 2006

ஒரு அம்மாவின் அழுகுரல்....

நான் ஒரு விதவை. எனது கணவர் சாலை விபத்தொன்றில் மரணமடைந்து விட்டார். என்னால் என்னுடைய 3 குழந்தைகளின் படிப்புச் செலவையும் அவர்களை வளர்ப்பதற்கு ஆகும் செலவையும் சமாளிப்பதற்கே மிகுந்த கடினப்பட்டுக்கொண்டு வாழ்க்கையில் போராடி வருகின்றேன்.

இந்தச் சூழலில் 19 வயது ஆகும் எனது மூத்தமகன் எஸ்.தாமரைச்செல்வனுக்கு சென்னை கேசிஜி Eng. கல்லூரியில் இலவசமாக இடம் கிடைத்தது.

எல்லா மாணவர்கள் போலவே இவனும் கல்லூரி மாணவர்ப்பருவத்திற்கே உரிய துள்ளலோடும் குறும்புகளோடும் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தான்.
அவன் இரண்டாம் ஆண்டு - 2005 படித்துக்கொண்டிருந்தபொழுது ஒருநாள் திடீரென்று மயக்கமுற்று தன்னை இழந்து விழுந்துவிட்டான். அவன் உடல் மிகவும் பலவீனமாகி இருந்தது கண்டறியப்பட்டது நாங்கள் அவனுக்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம்..

பின்னர் வழக்கம்போல் கல்லூரிக்கு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தான். மறுபடியும் ஒருநாள் மயங்கி விழுந்து Isabel மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அவன் பலஹீனமான நோயால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றான் உடனடியாக அவனுக்கு சிஎம்சி - வேலூர் மருத்துமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக Allogeneic Stem Cell Transplants செய்தால்தான் அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அந்தச் சிகிச்சைக்கு சுமார் 10 லட்சம் வரை செலவாகும் என்று வேலூர் சிஎம்சி மருத்துவமனை தெரிவித்தது. இந்தச்சிகிச்சையை இதுபோன்ற முக்கியமான சில மருத்துவமனைகளில் மட்டும்தான் செய்யமுடியம். மற்ற இடங்களில் செய்யும் வசதியில்லை .

அன்றாடத் தேவைகளோடு போராடும் அளவிற்கே என்னுடைய வருமானம் இருக்கின்றது. வேறு எந்த சொத்துக்களோ வருமானங்களோ இல்லை. ஆகவே என்னுடைய மகன் உயிர்வாழ நீங்கள் உதவுங்களேன்..


- அம்மா -





மகனின் உயிருக்காக போராடும் ஒரு தாயின் போராட்டத்திற்கு நீங்களும் கை கொடுங்களேன் இல்லை இல்லை உயிர் கொடுங்களேன்.

இந்தத் தாய்க்கு காலம் வெள்ளைநிறம் விதித்தாலும் மகனின் கலர் கனவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றாள்

எல்லா கல்லூரி மாணவர்களும் தேர்வுகளோடுதான் போராடுவார்கள். ஆனால் இந்த தாமரைச்செல்வன் தனது உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்றான்.


இந்த
அம்மாவின் அழுகுரல்
அனைவருக்கும் கேட்கிறதா..?





அம்மாவிற்காய் அழுகின்ற
குழந்தைகளுக்கு மத்தியில்
ஒரு குழந்தைக்காக அம்மா அழுகின்றாள்..





நீங்கள் செக் அல்லது டிடியை

Mr. Thamarai Selvan
Chart No : 780576 C


என்ற பெயரில் அனுப்ப வேண்டிய முகவரி...

The Treasurer
Christian Medical College
Vellore- 632 004


மேலும் விவரங்களுக்கு :

http://atulalex.googlepages.com/helpthamarai


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

3 Comments:

said...

என்னால் பணம் கொடுக்க இயலாது. தேவைப்பட்டால் ரத்தம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.என்னுடையது B+. நண்பர்களுக்கும் இதை சொல்கிறேன்.

தாமரைச்செல்வன் குணமடைய பிரார்த்தனைகள்.

1:42 PM  
said...

//Bharaniru_balraj said...
என்னால் பணம் கொடுக்க இயலாது. தேவைப்பட்டால் ரத்தம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.என்னுடையது B+. நண்பர்களுக்கும் இதை சொல்கிறேன்.

தாமரைச்செல்வன் குணமடைய பிரார்த்தனைகள். //



பிரார்த்தனைக்கு நன்றி பால்ராஜ்

இறைவன் தங்களுக்கும் மற்றவர்களுக்கு உதவும் வண்ணம் பொருளாதார வசதியை கொடுக்க வேண்டுகிறேன்..

2:49 PM  
said...

மாணவன் தாமரைச்செல்வனுக்கு அறுவைச்சிகிச்சைக்கு போதிய அளவு பணம் கிடைத்துவிட்டது என்று தகவல் வந்தது.

//hii gnaniyar..
thnkx for the blog site created for tamaraiselvan..we r reallyt hnkful to u,,now we got money..
we wanna prayers to help himm..
thnkx a lot....n ur poems r indeed good....we dont have words to say thnkx to u ...//

பணம் அனுப்பிய அனைவருக்கும் உதவி கிடைத்தவர்களின் சார்பில் பிரார்த்திக்கின்றேன்.


நன்றியுடன்

ரசிகவ் ஞானியார்

5:55 PM  

Post a Comment

<< Home