Tuesday, April 10, 2007

வலது கரத்தால் உதவி வலது கரத்தை காத்திடுவீர்!

( நண்பர் அலாவுதீன் அனுப்பி மடலிலிருந்து)



ஒரு திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளின்
பின்புறம் வந்து கொண்டிருந்தார் முகையதீன் அப்துல் காதர். திடீரென ஒரு
வவ்வால் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த அவரது நண்பரின்
கண்களுக்கு நேராகப் பாய அவர் நிலை குலைந்தார். பின்னால் இருந்த காதர் ஒரு
மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை உடனே
அவரை உறவினர்கள் சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தினால் காதரின் வலது கை முழுவதும் செயலிழந்து போனது.
மருத்துவர்களோ ' தசை திரும்பியுள்ளது. செயலிழந்த வலது கைக்கு உடற்பயிற்சி
கொடுத்தால் மூன்று மாதங்களில் சரியாவி விடும் என்று கூறி அனுப்பி
விட்டார் கள்.

மூன்று மாதம் அல்ல ஆறு மாதம் காதர் தனது செயலிழந்த வலது கரத்திற்கு
முறையான உடற்பயிற்சி செய்து வந்தார். பலன் ஏதும் கிடைக்காது போவவே சென்னை
அப்போலோ மருத்துவமனையில் பரிசோதித்த பொழுது பெரும் அதிர்ச் சியில்
காத்திருந்தது.

அப்போலோவில் காதரை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ''முதன்மையான நரம்பு
ஒன்று விபத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 12-04-2007 க்குள்
கட்டாயம் வலது கரத்திற்கு ஆபரேசன் செய்துகொள்ள வேண்டும். இல்லையேல் வலது
கரம் முழுவதும் அழுகி அதனை அகற்றிட வேண்டியதுதான் என்றும், இந்த
ஆபரேசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். உடனே பணத்திற்கு ஏற்பாடு
செய்து கொண்டு வாருங்கள்'' என்று கூறியுள்ளார்கள்.

வறுமையில் வாடும் காதரின் பெற்றோருக்கோ பத்து குழந்தைகள். காதர்
நான்காவது பிறந்தவர். டைலராகப் பணிபுரிந்து தனது பெற்றோர்களின் குடும்ப
பாரத்தை குறைத்து வந்தார். அவருக்கு தற்சமயம் வலது கரம் செயலிழந்து
விட்டதால் பத்து மாதங்களுக்கும் மேலாக தனது வறுமையான குடும்பத்தை மேலும்
வறுமையாகியுள்ளது.

தனது மூன்று இளைய சகோதரிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு
சகோதர்களை நன்கு படித்து ஆளாக்க வேண்டும் என்கிற பொறுப்பில் வேலை
பார்த்து வந்த அவரது வாழ்வில் இந்த எதிர்பாராத விபத்தால் காதரின்
குடும்பம் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளது

பொருளாதார வசதியின்றி வாடிக்கொண்டிருக்கும் காதரின் வலது கரத்தை
குணப்படுத்த அவருக்குத் தேவைப்படும் பணத்தைக் கொடுத்து உதவப் போவது யாரு?

காதரின் மருத்துவ சிகிச்சைக்கு கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களின்
பொருளாதார உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நல்லுள்ளம் கொண்ட இதயங்கள் காதருக்கு உதவுவதன் மூலம் அவரது
சகோதரிகளுக்கும், அவரது குடும்பத்திற்கும் உதவ முடியும்,. உதவும்
உள்ளங்களுக்கு நல்லருளை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக.

முகவரி:

S.M.A. பாத்திமா, 28/64 இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் ரோடு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600005 அலைபேசி 98418 17414
State Bank of India, A/C- 1014663599-6




அன்புடன்

ரசிகவ் ஞானியார்